தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சமையல் குறிப்புகள்...

காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டி தாது உப்புகள், உயிர் சத்துகள் நிறைந்திருக்கின்றன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைப்பது நல்லது.

News image
Updated On :23 டிசம்பர் 2023, 6:30 pm

காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டி தாது உப்புகள், உயிர் சத்துகள் நிறைந்திருக்கின்றன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைப்பது நல்லது.

கீரை வாங்கும்போது மஞ்சள் நிற இலைகள் அதிகம் இருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும்.  ஓட்டைகள், பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக் கூடாது.

தொண்டை கட்டிக் கொண்டால், கற்பூரவல்லி சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம்.

வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து, மாவால் மூடி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் வடை வித்தியாசமான ருசியோடு இருக்கும்.

பாகற்காய் குழம்பு செய்யும்போது, சில துண்டுகள் மாங்காய் சேர்த்தால் கசப்பு தெரியாது. ருசியும் கூடும்.

சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம் பழம், உப்பு சேர்த்து அரைத்து தயிரில் கலந்தால் சுவையான பச்சடி தயார்.

சூப்புகள் செய்யும்போது, சோளமாவு அல்லது ஒரு தேக்கரண்டி அவலை வறுத்து பொடித்து, சலித்து சேர்த்தால் ருசியாக இருக்கும்.

Story image

பச்சை கொத்தமல்லித் தழையை துவையலுக்கு அரைக்கும்போது, புளிபோடுவதற்குப் பதில் ஒரு துண்டு மாங்காயை போட்டு அரைத்தால் சுவையும் மணமும் அதிகமாகும்.

கீரையை புளி ஊற்றிக் கடையும்போது, அத்துடன் சில மோர் மிளகாய் வற்றலை வறுத்துப் போட்டு கடைந்தால் ருசியாக இருக்கும்.

கீரை சமைக்கும்போது, ஒரு மிளகு அளவிலான வெற்றிலை பாக்கு போடும் சுண்ணாம்பை கலந்தால், கீரை வெந்த பிறகும் நிறம் மாறாமல் இருக்கும்.

வாழைக்காயை பிரிட்ஜ்ஜில் வைக்கும்போது, இரண்டாக நறுக்கி வைத்தால் கருப்பாகாமல் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.