கல்வி அறிவு அதிகம் உள்ள, மதம், ஜாதி, மொழி வேறுபாடு பாராமல் கலப்புத் திருமணங்கள் அதிகம் நடக்கும் கேரளத்தில் சமீப காலமாக வரதட்சணை கொடுமையைத் தாண்டி கொலைகள், தற்கொலைகள் அதிகரித்துவிட்டன.
அரசு ஊழியர்களிடையே வரதட்சணைக் கொடுமைகள் நடக்காமல் இருக்க கேரள அரசு அதிரடி சட்டம் ஒன்றினை இயற்றியுள்ளது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் 1961-ன் படி வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனாலும் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் பலரும் வரதட்சணை வாங்குகிறார்கள். கேட்ட வரதட்சணை கிடைத்த பிறகும் மேலும் வரதட்சணை கேட்டு மணமகளை அடித்துத் துன்புறுத்துவதும்.. கொலை செய்வதும் கேரளத்தில் சகஜமாகிவிட்டது.
இனி கேரள அரசுத் துறைகளில் வேலை பார்க்கும் ஆண் அலுவலர்கள் திருமணம் செய்து கொள்ளும்போது பெண் வீட்டாரிடமிருந்து எந்தவொரு பொருளோ, பணமோ, நகையோ வரதட்சணையாக பெற்றுக்கொள்ளவில்லை என்று ஆவணத்தில் கையொப்பம் இட்டு, மனைவியிடம் கையொப்பம் பெற்று அரசிடம் சமர்பிக்க வேண்டும். இந்த ஆவணத்தில் சம்பந்தபட்ட மணமகள், அவரது தந்தை "வரதட்சணை கொடுக்கவில்லை' என்றும், மணமகன், மணமகனின் தந்தை "வரதட்சணை பெற்றுக் கொள்ளவில்லை' என்று கையொப்பம் இட வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் "வரதட்சணையைத் தடை செய்யும் அதிகாரிகள்' விரைவில் நியமிக்கப்படுவார்கள். திருமணம் ஆன ஒரு மாதத்திற்குள் இந்த அதிகாரியிடம் புது மணமகன் வரதட்சணை வாங்கவில்லை.. என்ற உறுதி மொழி அடங்கிய ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அந்த அதிகாரி ஆவணத்தைப் பரிசீலித்து ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்.
தவறான தகவல் கொடுத்தாலோ, போலிச்சான்றிதழ் சமர்ப்பித்தாலோ, ரூ.15,000க்கு மேல் பொருளாகவோ, பணமாகவோ பெற்றுக் கொண்டிருந்தால், வரதட்சணை வாங்கியவருக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை நிச்சயம், வரதட்சணை வாங்கவும் கொடுக்கவும் கூடாது. திருமணத்திற்கு பிறகு வரதட்சணை கேட்டு துன்புறுத்தக்கூடாது என கேரள அரசு எச்சரித்துள்ளது.
கேரள ஆளுநர் முஹம்மது ஆரிப் கான் கேட்டுக்கொண்டதன்படி, கேரள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் தங்களது திருமணத்திற்காக வரதட்சணை கொடுக்கவோ வாங்கவோ மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


