கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

எந்த வேலையாக இருந்தாலும் சிறப்பாக செய்வோம்!

கோவை மாநகராட்சியில் 549 துப்புரவு பணியிடங்கள் காலியாக இருந்தன. அந்த பணியிடங்களுக்கு 5200 பேர் விண்ணப்பித்து இருந்தனர். நேர்காணல் மூலம் 321 தேர்வு செய்யப்பட்டனர்.  இதில் தெலுங்குபாளையத்தை சேர்ந்த எம்.எ

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:42 pm

வனராஜன்

கோவை மாநகராட்சியில் 549 துப்புரவு பணியிடங்கள் காலியாக இருந்தன. அந்த பணியிடங்களுக்கு 5200 பேர் விண்ணப்பித்து இருந்தனர். நேர்காணல் மூலம் 321 தேர்வு செய்யப்பட்டனர்.  இதில் தெலுங்குபாளையத்தை சேர்ந்த எம்.எஸ்சி. படிக்கும் மாணவியான மோனிகா, பணி நியமன ஆணை பெற்று  தற்போது பணியாற்றி வருகிறார்.

""மாநகராட்சியில் வேலைக்கு ஆள் எடுப்பதை அறிந்து அதற்கான நேர்காணலில் பங்கேற்றேன். படித்திருக்கிறோம் என்பதால் துப்புரவு பணி செய்யமாட்டோம் என்பது இல்லை. எந்த வேலையாக இருந்தாலும் சிறப்பாக செய்வோம். வேலை கிடைத்தது என்று போனில் தகவல் வந்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
அரசு வேலையில் சேர வேண்டும் என்பது எனது சிறுவயது கனவு. தற்போது அது நிறைவேறி உள்ளது. அரசு வேலை என்பதால் நான் இந்தப் பணியில் சேர்ந்தேன். எனக்கு முதன் முதலாக ராஜவீதியில் ரோட்டை சுத்தம் செய்யும் பணி வழங்கப்பட்டது. இந்த பணி ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. சாலையில் செல்பவர்கள் அனைவரும் என்னையே பார்த்து சென்றனர். ஆனால் நான் அதனை சமாளித்து விட்டேன். இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. இந்தப் பணியில் இருந்து இன்னும் மேலே உள்ள பணிகளுக்கு வர முயற்சி எடுப்பேன்'' என்கிறார் மோனிகா. 

பத்மாவதி என்ற பெண்ணும் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வந்த பத்மாவதி, அங்குக் கிடைக்கும் ஊதியத்தை விடத் துப்புரவு பணியில் அதிக ஊதியம் கிடைப்பதால், கணக்காளர் பணியை விட்டுவிட்டு இப்பணியில் சேர்ந்துள்ளார்.

தற்போது யாருக்கும் படித்த படிப்பிற்கு வேலை கிடைப்பதில்லை என தெரிவிக்கும் பட்டதாரி பெண்கள், தற்போது ஜெராக்ஸ் கடையில் 8 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை பார்த்து வரும் நிலையில் துப்புரவு பணியாளர் வேலை கிடைத்தால் இன்னும் அதிகம் ஊதியம் கிடைக்கும் என்பதால்  இந்த பணிக்கு விண்ணப்பித்து  இருந்ததாக தெரிவிக்கின்றனர். 

இப்பணிக்கான தகுதி , 21 முதல் 57 வயதுக்குள் இருக்க வேண்டும். தமிழ் மொழியை எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 10}ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.15,700 முதல் ரூ. 50 ஆயிரம் வரை வழங்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.