டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

உடல் கட்டமைப்பு போட்டியில் ஹிஜாப் உடை..! 

பல் மருத்துவத்தில் நான்காம் ஆண்டு மாணவி மஜிஸியா பானு கேரளத்தைச் சேர்ந்தவர். திருமணமானவர். பளுதூக்கும் வீராங்கனை. தேசிய அளவில், ஆசிய அளவில் பதக்கங்களைப் பெற்றிருப்பவர்.

News image
Updated On :25 ஏப்ரல் 2018, 6:46 am

பல் மருத்துவத்தில் நான்காம் ஆண்டு மாணவி மஜிஸியா பானு கேரளத்தைச் சேர்ந்தவர். திருமணமானவர். பளுதூக்கும் வீராங்கனை. தேசிய அளவில், ஆசிய அளவில் பதக்கங்களைப் பெற்றிருப்பவர். பள்ளியில் படிக்கும் போது தடகள போட்டிகளில் பங்கு பெற்று பிறகு குத்துச்சண்டை பயின்று... பளுதூக்கும் வீராங்கனையானவர். சமீபத்தில் ஆஞஈவ 
ஆமஐகஈஐசஎ எனப்படும் உடல் கட்டமைப்பு போட்டியில் பெண்கள் பிரிவில் "மிஸ்டர் கேரளா'வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
மஜிஸியா பானு பளுதூக்கும் போட்டிகளிலும் சரி... உடல் கட்டமைப்பு போட்டியிலும் சரி... ஹிஜாப் எனப்படும் பர்தா அணிந்து கொண்டு கலந்து கொண்டார். பயிற்சியின் போதும் ஹிஜாப் அணிந்து கொள்ள மறப்பதில்லை. 
"என் இப்படி..' என்று கேட்டால், "இந்த போட்டிகளுக்கும் உடைக்கும் எந்த தொடர்பும் இல்லை. உடல் கட்டமைப்பு போட்டியில், இந்த மாதிரி ஹிஜாப் உடை அணிவதில்லை. ஆனால் இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் அணிந்து கொள்கிறார்கள். எப்படி உடலைக் காண்பிக்க உரிமை இருக்கிறதோ, உடை அணிந்து மூடிக் கொள்ளவும் பெண்ணுக்கு உரிமை இருக்கிறது. உடல் கட்டமைப்பு போட்டியில் பரிசு கிடைத்தால் கிடைக்கட்டும். கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை' என்றுதான் ஹிஜாப் அணிந்து கலந்து கொண்டேன். ஆனால் போட்டியில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டது எதிர்பாராதது'' என்கிறார் மஜிஸியா பானு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.