டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி

சிரியா ஷர்மாவை ஞாபகம் இருக்கிறதா? ஒரு காலத்தில் டிவி, பத்திரிகை விளம்பரங்களில் குழந்தையாக வந்து கலக்கியவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஒரு ரவுண்டு வந்தவர். 

News image
Updated On :8 நவம்பர் 2017, 4:48 pm

சிரியா ஷர்மாவை ஞாபகம் இருக்கிறதா? ஒரு காலத்தில் டிவி, பத்திரிகை விளம்பரங்களில் குழந்தையாக வந்து கலக்கியவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஒரு ரவுண்டு வந்தவர். 
குறிப்பா சொல்லனும்னா "சில்லுன்னு ஒரு காதல்' படத்தில் சூர்யா - ஜோதிகாவின் மகளாக நடித்தவர் சிரியா. சமீபத்தில் தீபாவளியை ஒட்டி ஒரு துணிக்கடை குழுமத்துக்காக விளம்பரப் படத்தில் நடித்
திருந்தார். 
இருபது வயதாகும் சிரியா ஷர்மா, "காயக்குடு', "நிர்மலா கான்வென்ட்' ஆகிய படங்களில் நாயகியாக நடிக்க 2016-இல் படங்கள் வெளியாயின. படங்கள் பெரிய ஹிட் ஆகவில்லை. அதனால் வாய்ப்புகளும் வரவில்லை. ஆனால் தமிழ் 
திரையுலகம் சிரியாவை மறக்கவில்லை. 
""தெலுங்கு வெற்றிப் படமான "அர்ஜுன் ரெட்டி' தமிழில் தயாராகிறது. நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகும் இந்தப் படத்தில் நான்தான் துருவுக்கு ஜோடி. பாலா சார் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது நான் செய்த பாக்கியம்'' என்கிறார் சிரியா. 
இன்னொரு ஸ்ரீதேவியாக திரைப்பட உலகில் வலம் வருவாரா என்பதைப் பாலாவின் படம் உறுதி செய்யும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.