‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

செவ்வாய் கிரக பயணம்... தயாராகும் நாசா!

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் நீண்டகாலத் திட்டத்தை நோக்கிய நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:55 am

எஸ். ராஜாராம்

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் நீண்டகாலத் திட்டத்தை நோக்கிய நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா. அதன் ஒரு பகுதியாக செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற ஓராண்டு அனுபவத்தைப் பெறுவதற்கு தன்னார்வலர்களைத் தேடத் தொடங்கியுள்ளது.

இதற்காக ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் 1700 சதுர அடியில் செவ்வாய் கிரக சூழலுடன் கூடிய ஓர் இடத்தை உருவாக்கியுள்ளது. ஒரு டென்னிஸ் கோர்ட்டை விட சிறியதாக இந்த இடம் இருக்கும். இதில் பங்கேற்க இதுவரை 4 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

இவர்கள் இந்த உருவாக்கப்பட்ட அறையில், செவ்வாய் கிரகத்தில் ஏற்படக்கூடிய தகவல் தொடர்பு தாமதம், உபகரணங்களின் தோல்வி உள்ளிட்ட சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும். அவர்கள் உருவகப்படுத்தப்பட்ட விண்வெளி நடைப் பயிற்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சியையும் மேற்கொள்வார்கள். விண்வெளிப் பயணத்தின்போது, விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படும் உணவே அவர்களுக்கு வழங்கப்படும். இதுபோன்ற 3 பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்கும் தன்னார்வலர்கள் 30-35 வயதுக்குள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்; அறிவியல் அல்லது பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்; அமெரிக்க குடிமக்கள் அல்லது நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பன போன்ற நிபந்தனைகளையும் நாசா விதித்துள்ளது. இதை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயாராகும் பணி என நாசா தெரிவித்துள்ளது. 2030-களில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கான திட்டத்துக்கு இந்த ஆராய்ச்சி உதவும் எனவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.