எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாட்ஸ் ஆப்:

ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிப்போய் உள்ள மக்களை சொந்தங்களுடனும், நண்பர்களுடனும், அலுவலகப் பணியாளர்களுடனும் இணையத்தில் நேருக்கு நேர் இணைத்து வருகிறது வீடியோ கால் சேவை.

News image
Updated On :26 ஜூன் 2020, 9:35 am

ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிப்போய் உள்ள மக்களை சொந்தங்களுடனும், நண்பர்களுடனும், அலுவலகப் பணியாளர்களுடனும் இணையத்தில் நேருக்கு நேர் இணைத்து வருகிறது வீடியோ கால் சேவை. தற்போதைய கரோனா நோய்த் தொற்றில் இருந்து தப்பிக்க இந்த வீடியோ கால் தொழில்நுட்பம் உலகம் முழுவதும் பெரிதும் உதவியாக உள்ளது. இதனால், வீடியோ கால் சேவையை வழங்கும் நிறுவனங்களுக்குள் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. 

ஒரே நேரத்தில் வீடியோ காலில் நான்கு பேர் பங்கேற்கும் வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் எட்டாக அதிகரித்துள்ளது. சொந்தபந்தங்கள், நண்பர்கள் ஆகியோருடன் பொழுதுபோக்காகப் பேசுவதற்காக வாட்ஸ் ஆப் வீடியோ கால் வசதி இந்தியாவில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எட்டுப் பேரை இணைக்கும் புதிய வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் முதலில் "ஐஓஎஸ்' மூலம் இயங்கும் ஆப்பிள் போன்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. அடுத்ததாக ஆன்ட்ராய்டு போன்களுக்கு வர உள்ளது. இதற்காக வாட்ஸ் ஆப்பை 2.20.50 எனும் புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் வாட்ஸ் ஆப்பில் உள்ள வீடியோ கால் பொத்தானை தட்டி மேலும் 7 பேரை சேர்த்து கொள்ள வேண்டும். இதில் இணையும் மற்ற 7 பேரும் வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்து கொள்ள வேண்டியது அவசியம். 

பெரும்பாலான அரசு, தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுடன் உரையாட "ஜூம்' காணொலிக் காட்சி மென்பொருளைப் பயன்படுத்துகின்றன. இதன் மூலம் ஒரே நேரத்தில் 100 பேரை இணைக்க முடியும். அடுத்தபடியாக "ஸ்கைப்' மற்றும் "ஃபேஸ்புக் நியூ மெசஞ்சர் ரூம்ஸ்' சேவைகள் மூலம் சுமார் 50 பேரைக் காணொலிக் காட்சியினால் இணைக்க முடியும். ஆப்பிள் செல்லிடப்பேசியில் உள்ள "ஃபேஸ் டைம் சப்போர்ட்'- இல் 32 பேரையும், கூகுள் டுவோவில் 12 பேரையும் இணைக்க முடியும். 

வீடியோ கால்களில் பன்படுத்தப்படும் தரவுகள் பாதுகாப்பானவை அல்ல என்று எச்சரிக்கப்படுவதால் இந்த சேவையைப் பயன்பாட்டுக்கு ஏற்ப பாதுகாப்புடன் பயன்படுத்துவதே சிறந்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.