எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரசு ஊழியராக ரோபோ!

பணிச்சுமைகளைக் குறைக்க மனிதனால் உருவாக்கப்பட்டது ரோபோ.தொழிற்சாலைகள், பாதுகாப்பு துறை, வங்கிகள், ஹோட்டல்கள் வரை இதன் செயல்பாடு விரிவடைந்துள்ளது.

News image
Updated On :21 ஜூலை 2020, 12:30 am

பணிச்சுமைகளைக் குறைக்க மனிதனால் உருவாக்கப்பட்டது ரோபோ.

தொழிற்சாலைகள், பாதுகாப்பு துறை, வங்கிகள், ஹோட்டல்கள் வரை இதன் செயல்பாடு விரிவடைந்துள்ளது.

நேரம் தவறாமை, சொன்னதை மட்டும் கேள்விகள் கேட்காமல் செயல்படுத்துவது ஆகியவற்றால் வெளிநாட்டினர் பல்வேறு துறைகளில் ரோபோக்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போதைய கரோனா தொற்றுக் காலத்தில் மருத்துவமனைகளில் நோய்த் தொற்று உள்ளவர்களுக்கு மருந்து, உணவு ஆகியவற்றைப் பாதுகாப்புடன் கொண்டு சேர்க்கவும், ரோபோக்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் அடுத்தகட்டமாக ரஷ்யாவில் பெண்ணைப் போன்று தயாரிக்கப்பட்ட ரோபோ அரசு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு அசல் பெண்ணைப் போன்று நீண்ட கூந்தலுடன் காணப்படும் இந்த ரோபோ, ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிரம் நகரத்தில் அரசு ஊழியராகப் பணி அமர்த்தப்பட்டுள்ளது.

ரோபோவின் முகத்தில் உள்ள உதடு, புருவம், கண்கள் ஆகியவை மனிதர்களைப் போன்று சுமார் 600 முகஜாடைகளில் ஈடுபடும் திறன் படைத்தது.

ஆயிரக்கணக்கான ரஷிய பெண்களின் முகஜாடைகளை வைத்து அந்த நாட்டு பெண்ணைப் போன்றே இந்த ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியரைப் போன்று உடையணிந்து அமர்ந்திருக்கும் இந்த பெண் ரோபோ, தன்னிடம் வருபவர்களின் அனைத்து தரவுகளையும் சோதனை செய்து அவர்கள் மீது எந்தவித குற்ற வழக்குகள், போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் பதிவாகவில்லை என்று அரசு சார்பில் நற்சான்றிதழை அளிக்கிறது. அதற்காக இந்த ரோபோ பிரிண்டர், ஸ்கேனருடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளது.

தேவைப்படுபோரிடம் கேள்விகள் எழுப்பி பதிலைப் பெறுவதிலும் இந்த ரோபோ படுசுட்டி.

ரஷியா செல்பவர்கள் அரசு பணியில் உள்ள பெண்கள் ரோபோவா, மனிதரா என்று தெரிந்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.