எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கரோனா பரிசோதனையில் ரோபோ!

பூமி சுற்றுவதையே கரோனா தொற்று நோய் நிறுத்திவிட்டதைப் போன்ற நெருக்கடியான சூழலை உலகம் எதிர்கொண்டு வருகிறது. கண்ணுக்குத் தெரியாத கரோனா தொற்று மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. எனினும், மன

News image
Updated On :2 ஏப்ரல் 2020, 11:44 am

பூமி சுற்றுவதையே கரோனா தொற்று நோய் நிறுத்திவிட்டதைப் போன்ற நெருக்கடியான சூழலை உலகம் எதிர்கொண்டு வருகிறது. கண்ணுக்குத் தெரியாத கரோனா தொற்று மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. எனினும், மன தைரியத்துடன் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மனித உயிர்களைக் காப்பாற்றும் பணியில் களத்தில் செயலாற்றி வருகின்றனர். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் சோதனை செய்யும்போது தெரிந்தோ, தெரியாமலோ மருத்துவர்களும் இந்த நோய்த் தொற்றுக்கு 
ஆளாகின்றனர். 

கரோனா நோயின் கடும் பாதிப்புக்கு உள்ளான இரண்டாவது நாடான ஸ்பெயினில் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 சதவீதம் பேர் மருத்துவ பணியாளர்கள் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிலும், கரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டபோதுதான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால், இந்தப் பணியில் ரோபோக்களை ஈடுபடுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு நாளும் சுமார் 20 ஆயிரம் பேரை கரோனா பரிசோதனை செய்யும் ஆற்றல் ஒரு ரோபோவுக்கு உண்டு. நான்கு ரோபோக்களை வாங்கி சுமார் 80 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த ரோபோக்கள் எங்கிருந்து வாங்கப்படுகின்றன என்ற விவரங்களை அந்நாட்டு அரசு வெளியிடவில்லை. ஆனால், இந்த ரோபோக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், விரைவில் பணியில் ஈடுபடுத்தப்படும் என்றும் ஸ்பெயின் நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

கரோனா பாதித்த நோயாளிகளுக்கு உணவு, மருந்து ஆகியவற்றை மருத்துவமனைகளில் விநியோகிக்க அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள்  ஏற்கெனவே ரோபோக்களைப் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், இக்கட்டான கரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் இந்த செயற்கை நுண்ணறிவு ரோபோவை உலக நாடுகள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.