பூமி சுற்றுவதையே கரோனா தொற்று நோய் நிறுத்திவிட்டதைப் போன்ற நெருக்கடியான சூழலை உலகம் எதிர்கொண்டு வருகிறது. கண்ணுக்குத் தெரியாத கரோனா தொற்று மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. எனினும், மன தைரியத்துடன் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மனித உயிர்களைக் காப்பாற்றும் பணியில் களத்தில் செயலாற்றி வருகின்றனர். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் சோதனை செய்யும்போது தெரிந்தோ, தெரியாமலோ மருத்துவர்களும் இந்த நோய்த் தொற்றுக்கு
ஆளாகின்றனர்.
கரோனா நோயின் கடும் பாதிப்புக்கு உள்ளான இரண்டாவது நாடான ஸ்பெயினில் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 சதவீதம் பேர் மருத்துவ பணியாளர்கள் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிலும், கரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டபோதுதான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால், இந்தப் பணியில் ரோபோக்களை ஈடுபடுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு நாளும் சுமார் 20 ஆயிரம் பேரை கரோனா பரிசோதனை செய்யும் ஆற்றல் ஒரு ரோபோவுக்கு உண்டு. நான்கு ரோபோக்களை வாங்கி சுமார் 80 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த ரோபோக்கள் எங்கிருந்து வாங்கப்படுகின்றன என்ற விவரங்களை அந்நாட்டு அரசு வெளியிடவில்லை. ஆனால், இந்த ரோபோக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், விரைவில் பணியில் ஈடுபடுத்தப்படும் என்றும் ஸ்பெயின் நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.
கரோனா பாதித்த நோயாளிகளுக்கு உணவு, மருந்து ஆகியவற்றை மருத்துவமனைகளில் விநியோகிக்க அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே ரோபோக்களைப் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், இக்கட்டான கரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் இந்த செயற்கை நுண்ணறிவு ரோபோவை உலக நாடுகள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி
பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


