திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வேலை... வேலை... வேலை...

லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ஐ.டி பிரிவுகளுக்கு  விண்ணப்பிப்பவர்கள் 02.07.1994 - 01.01.2000 க்குள் பிறந்திருக்க வேண்டும். சட்டப் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 02.07.1992 -  01.07.1997க்குள் பிறந்திருக்க வேண்ட

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:57 pm

பரிதி இரா. வெங்கடேசன்


இந்திய கப்பல் படையில் வேலை

மொத்தம் காலியிடங்கள்: 37 
1. SSC (Logistics)  - 20
2. SSC ( IT) - 15
3. SSC (Law) - 02 
வயது வரம்பு: லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ஐ.டி பிரிவுகளுக்கு  விண்ணப்பிப்பவர்கள் 02.07.1994 - 01.01.2000 க்குள் பிறந்திருக்க வேண்டும். சட்டப் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 02.07.1992 -  01.07.1997க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: லாஜிஸ்டிக்ஸ் பிரிவுக்கு 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ., எம்.பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.எஸ்சி.,(ஐ.டி.,)யுடன் நிதியியல், லாஜிஸ்டிக்ஸ், சப்ளை செயின் மேனேஜ்மெண்ட், மெட்டீரியல் மேனேஜ்மெண்ட் பிரிவு ஏதாவது ஒன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். எம்.சி.ஏ., எம்.எஸ்சி., (ஐ.டி.,) பி.ஆர்க்., போன்ற படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஐ.டி., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., பி.டெக்., போன்ற ஏதாவதொன்றில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., பி.எஸ்சி., ஐ.டி., எம்.எஸ்சி., ஐ.டி, எம்.டெக்., பி.சி.ஏ., எம்.சி.ஏ., போன்ற படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சட்டப் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 55 சதவீத மதிப்பெண்களுடன் சட்ட படிப்பு முடித்துவிட்டு வழக்கறிஞர் சட்டம் 1961 கீழ் வழக்கறிஞராகப் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்பி மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in  என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_23_1819b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.10.2018

எம்ப்ளாயிஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ்
கார்ப்பரேஷனில் வேலை

மொத்த காலியிடங்கள்: 539 
பதவி: Social Security Officer/ Manager Gr-II/ Superintendent

வயது வரம்பு:  21 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு  உச்சபட்ச வயது வரம்பில் விலக்கு உண்டு.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவதொரு பிரிவில் பட்டம் (வணிகவியல், மேலாண்மை,சட்டம்) பெற்றிருப்பதுடன் கூடுதலாக கணினி தொடர்புடைய தகவல்கள் கூடுதலாக பெற்றிருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற வலைதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.250.  
தேர்வு செய்யப்படும் முறை: அப்ஜெக்டிவ் வகையிலான முதல் கட்டத் தேர்வு, இறுதித் தேர்வு, டெஸ்கிரிப்டிவ் வகையிலான கம்ப்யூட்டர் திறனறியும் தேர்வு, ஆங்கிலத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
மேலும் விவரங்கள் அறிய: https://www.esic.nic.in/attachments/recruitmentfile/8f87c0233b19a3cd64cb2165efdd8bb8.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.10.2018

பொதுத்துறை வங்கிகளில் வேலை

பதவி: Clerical (பொதுத்துறை வங்கிகள்) 
காலியிடங்கள்: 7,275 (தமிழகத்தில் மட்டும் 792 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன)
வயது வரம்பு:  20 வயது முதல்  28 வயதிற்குள் இருக்க வேண்டும்.  
தகுதி: ஏதாவதொரு துறையில்   இளங்கலைப் பட்டம் மற்றும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஐபிபிஎஸ் நடத்தும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர்  அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து  வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். 
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, கோவை, சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், நாகர்கோவில்,  திருநெல்வேலி, விருதுநகர், வேலூர், புதுச்சேரி.
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 08.12.2018 முதல் 16.12.2018 வரை நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.ibps.in/wp-content/uploads/Detailed_Advt_CRP_Clerks_8_1.pdf என்ற வலைதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.10.2018


தமிழக அரசின் வழக்காடல் துறையில் வேலை


பதவி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 28
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: அரசு தலைமை வழக்குரைஞர், அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகம், உயர்நீதிமன்றம், சென்னை - 600 104  
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 22.10.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.tn.gov.in என்ற வலைதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.