எந்த ஹோட்டலில் சாப்பிட்டு வந்தீர்கள்?'' என்று கேட்டால், ""விண்வெளியில் உள்ள ஹோட்டலில்'' என பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம். ஆம். விண்வெளியில் 2022-ஆம் ஆண்டு சொகுசு ஹோட்டலை திறக்கிறது அமெரிக்காவின் ஓரியன் ஸ்பான் என்ற தனியார் நிறுவனம்.
இதற்கு "அயூரா விண்வெளி ஹோட்டல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 200 மைல் தூரத்தில் அமைக்கப்பட உள்ள இந்த சொகுசு ஹோட்டல் கொண்ட ராக்கெட் 2012-ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது. இது குறித்து ஓரியன் ஸ்பான் நிறுவனம் தெரிவித்திருப்பதாவது:
""இரண்டு பேர் தங்கும் சொகுசு அறை கொண்ட இந்த ஹோட்டலுக்குச் செல்ல மொத்தம் 12 நாள் பயணம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு முன்னதாக 3 மாதங்கள் பயிற்சியும் எடுத்துக் கொள்ள வேண்டும். முதல்கட்டமாக ஒரு குழுவில் 6 பேர் அனுப்பப்படுவார்கள். விண்வெளி வீரர்கள் இரண்டு பேரும் குழுவில் இருப்பார்கள்.
இந்த பயணத்துக்கான முன்பதிவை ஓரியன் ஸ்பான் நிறுவனம் இணையதளத்தில் தொடங்கியுள்ளது. பயணக் கட்டணமாக ரூ. 55 கோடியும், முன்பதிவுக் கட்டணமாக ரூ. 5 கோடியும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இருந்தபடியே, இதுவரை கண்டிராத பூமியின் அழகைக் கண்டு ரசிக்கவும், இந்த விண்வெளி அனுபவத்தைக் கொண்டு ஆய்வில் ஈடுபடவும் இந்தப் பயணம் வழிவகுக்கும்.
புவிவட்டத்தில் 90 நிமிடங்களில் ஒரு சுற்றுப் பாதையை முடிக்கும் இந்த ஹோட்டலில் இருந்து ஏராளமான சூரிய உதயங்களையும், அஸ்தமனங்களையும் காணலாம். இந்த ஹோட்டலின் பரப்பளவு 43.5 அடி நீளமும், 14.1 அடி அகலமும் கொண்டதாகும். வருங்காலங்களில் இந்த ஹோட்டலின் விரிவாக்கப் பணிகளும் மேற்கொள்ளப்படும். விண்வெளியின் சுற்றுப்புறத்தைக் காண, வழக்கத்துக்கு மாறாக ஏராளமான ஜன்னல்கள் இந்த விண்கலத்தில் அமைக்கப்படுகின்றன.
கடைசி நேரத்தில் பயணத்தை மேற்கொள்ள விரும்பவில்லை என்றாலும் முன்பதிவாளர்கள் செலுத்திய கட்டணம் திருப்பித் தரப்படும். இந்தப் பயணத்தை பிறருக்கு பரிசாகவும் அளிக்கலாம் என்று ஸ்பான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி
பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


