எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நறுமணம் அறியும் ஆப்!

ஸ்மார்ட்போன்களையும் மனிதர்களையும் இணைக்கும் பாலமாக ஆப்கள் செயல்படுகின்றன.

News image
Updated On :3 ஏப்ரல் 2018, 12:09 pm

ஸ்மார்ட்போன்களையும் மனிதர்களையும் இணைக்கும் பாலமாக ஆப்கள் செயல்படுகின்றன. மனிதர்களின் அன்றாடத் தேவைகளான உடற்பயிற்சி, உணவு, நீர் போன்றவற்றை ஆப்கள் துல்லியமாகக் கணக்கிட்டு தகவல்களைத் தெரிவிக்கின்றன. தற்போது, முதல்முறையாக நறுமணத்தையும் ஆப் மூலம் தேர்வு செய்யும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆம், இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் போராசிரியர் ஹோஸôம் ஹெயிக் இதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார். நானோ துகள்களைக் கொண்டு இதற்காக சென்சார்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சென்சாரை, சோப்புகள், சென்ட், பூக்கள் போன்ற நறுமணம் வீசும் பொருள்களுக்கு அருகே கொண்டு செல்லும்போது நறுமணத்திற்கு ஏற்ப சிக்னல்களை வெளிப்படுத்தும். இந்த சிக்னல்களை ஆப் மூலம் பதிவு செய்து, ஒருவர் பயன்படுத்தும், விரும்பும் வாசனைப் பொருட்களைக் கண்டுபிடிக்கலாம். அதன் அடிப்படையில் அவர்களுக்கு பிடிக்கக் கூடிய பிற நறுமணப் பொருள்களை ஆப் மூலம் தேர்வு செய்தும் வழங்கலாம். இது நிறைவேறும் காலம் வெகு தொலைவில் இல்லை.
நானோ துகள்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த சென்சார்கள் ஸ்மார்ட் போன்களின் மூக்காக செயல்படும் என்று இதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலின் நானோ சென்ட் நிறுவனத்தின் நிறுவனர் இரான் ரோம் தெரிவிக்கிறார்.
மேலும், இந்த தொழில்நுட்பத்தை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்துவதின் மூலம் மனிதர்களின் பல்வேறு வகையிலான பிரச்னைகளுக்கும் வரும் காலங்களில் தீர்வு காணலாம் எனவும் அவர் உறுதி அளிக்கிறார். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் அசுர வேகத்தை வைத்துப் பார்க்கும்போது மனிதர்களின் ஆறாம் அறிவான பகுத்தறிவையும் ஆப்கள் பெற்றுவிடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.