எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

காற்றினிலே வரும் காட்சி!

பள்ளிகள், அலுவலகங்களில் புகைப்படங்கள், ஆய்வு அறிக்கைகள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் மற்றும் வீடியோ காட்சிகளை ஒரே நேரத்தில் பலரும் பார்க்கும் வகையில் காட்சியாகத் திரையில் தெரியப்படுத்துவதற்கு புரொஜக்டர் கருவியின் தேவை இன்றியமையாததாக உள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:00 pm

எஸ். நாராயணன்

பள்ளிகள், அலுவலகங்களில் புகைப்படங்கள், ஆய்வு அறிக்கைகள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் மற்றும் வீடியோ காட்சிகளை ஒரே நேரத்தில் பலரும் பார்க்கும் வகையில் காட்சியாகத் திரையில் தெரியப்படுத்துவதற்கு புரொஜக்டர் கருவியின் தேவை இன்றியமையாததாக உள்ளது. தற்போது வீடுகளில் கூட பெரிய அளவிலான திரையில் திரைப்படங்களைக் காணும் வகையில் புரொஜக்டரின் தேவை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் திரையே இல்லாமல் காற்றிலேயே மேற்படி ஒளிபரப்புத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் புதிதாக வரவுள்ளது ஏரியல் டிஸ்பிளே புரொஜக்டர் கருவி. இக்கருவி மூலம் 90 அங்குலம் திரை அளவில் காட்சிகளை ஒளிபரப்ப இயலும். இதன் மூலம் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் ஆகாய மார்க்கமாக காட்சிகளை ஒளிபரப்பச் செய்யலாம்.

இருவேறு வகையான ஒளிக்கற்றைகளை செலுத்தி, திரும்பப் பெறும் தொழில்நுட்பம் மூலம் இந்த ஒளிப்பரப்பு கருவி வடிமைக்கப்பட்டிருக்கிறது.

வரும் 2020ஆம் ஆண்டில் வெளியிடும் வகையில் ஜப்பானின் மிட்சுபிஸி நிறுவனம் இக்கருவியைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.