எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அரசு பொதுத்தேர்வு எழுத ரேஷன்கார்டு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளைக் குறைக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:42 am

ஆர். வெங்கடேசன்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளைக் குறைக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களோடு பல்வேறு ஆவணங்களும் இணைக்கப்பட்டு சோதிக்கப்படுகின்றன.

மாணவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும்போது தவறு நடக்காமல் இருக்க அனைத்து மாணவர்களும் தங்களது ரேஷன் கார்டு நகலை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு எண், மாணவர்களின் பிற விவரங்களோடு கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்படும்.

தேர்வு முடிந்ததும், அந்த எண்ணை வருவாய்த்துறைக்கு அனுப்பி சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்று போன்ற ஆவணங்களை பள்ளியே பெற்றுத் தரும்.

மேலும், தேர்வு முடிவு வந்த பிறகு ரேஷன் கார்டு எண்ணை வைத்தே வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து கொள்ள முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.