மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

உள்ளங்கை அளவில் 'திருக்குரான்'

புனித நூலான திருக்குரான் 30 ஜூஸ்வு பிரிவுகளாக, 114 அத்தியாயங்களில் 6,666 புனித வசனங்களில் மனிதர்களுக்கு அறநெறியைக் கற்பிக்கின்றன.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 10:47 am

புனித நூலான திருக்குரான் 30 ஜூஸ்வு பிரிவுகளாக, 114 அத்தியாயங்களில் 6,666 புனித வசனங்களில் மனிதர்களுக்கு அறநெறியைக் கற்பிக்கின்றன. அரபி மொழியில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூல், பல நூறாண்டுகளாக வெவ்வேறு வடிவங்களில் முஸ்லிம்களின் இல்லங்களில் குடிகொண்டுள்ளது.

உள்ளங்கைக்குள் அடங்கும் வகையில், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் தோலில் மூடப்பட்ட உறையுடன் கூடிய அபூர்வமான சிறிய திருக்குரான் நூலை

சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடியைச் சேர்ந்த அறுபது வயதான வணிகர் சித்திக் அலியின் குடும்பத்தினர் பாதுகாத்து வருகின்றனர்.

அவரிடம் பேசியபோது:

'எனது முன்னோரான முகம்மது மதார் சாஹிப், கரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஜமீன் ஆத்தூரை பூர்விகமாகக் கொண்டவர். இவர் 150 ஆண்டுக்கு முன்னர் முஸ்லிம்களின் புனிதத் தலமான மெக்காவுக்குக் கப்பலில் சென்றார்.

அப்போது அங்கு 5 செ.மீ. அகலத்திலும், 8 செ.மீ. நீளத்திலும் விற்பனை செய்யப்பட்ட மிகச் சிறிய அளவில் நுணுக்கமான பூ வேலைப்பாடுகள் கொண்ட தோல் உறையால் மூடப்பட்ட அபூர்வமான திருக்குரான் நூலை வாங்கி வந்தார்.

கப்பலில் செல்லும்போது திசையை அறிந்து தொழுவதற்காக வெள்ளியில் தயாரிக்கப்பட்ட ஒரு நாணயத்தின் அளவில் வட்டவடிவத்தில் மிகச் சிறிய திசைக்காட்டும் கருவியையும் வாங்கி வந்தார். மேலும், அவர் வெளிநாட்டுப் பயணத்தின்போது பல்வேறு நாடுகளின் நாணங்கள் மற்றும் பணத்தாள்களையும் வாங்கி வந்தார். இவற்றை அவர் தனது மகன் அப்துல்ரபியிடம் ஒப்படைத்துச் சென்றுள்ளார்.

இவற்றை நாங்கள் மூத்தோரை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னமாகக் கருதி இன்றளவும் பாதுகாத்து வருகிறோம்' என்கிறார் சித்திக் அலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.