திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மேகங்களுக்குள் மறையும் பூமி...

உலகின் மிகப் பெரிய தட்டையான உப்புத்தளம் சலார் டி உயுனி ஆகும். பொலிவியாவின் உயர்ந்த மலைகளில் உள்ள இந்த இடத்தில் பூமியானது மேகங்களுக்குள் மறையும்.

News image
Updated On :9 நவம்பர் 2025, 12:01 am IST

உலகின் மிகப் பெரிய தட்டையான உப்புத்தளம் சலார் டி உயுனி ஆகும். பொலிவியாவின் உயர்ந்த மலைகளில் உள்ள இந்த இடத்தில் பூமியானது மேகங்களுக்குள் மறையும்.

இதன் பரப்பளவு 10,582 சதுர கி.மீ. ஆகும். தென் மேற்கு பொலிவியாவில் ஆண்டிஸ் மலைகளுக்கு இடையே உள்ள ஆல்டிபிளானோ பீட பூமியில் உள்ளது.

மழைக்குப் பின்னர், அதன் மேற்பரப்பு முழு வானத்தையும் பிரதிபலித்து, கண்ணாடியாக மாறுகிறது. அப்போது, சொர்க்கத்தின் வழியாக நடப்பதுபோல் தெரியும்.

இந்தத் திகைக்க வைக்கும் காட்சி இயற்பியலின் எளிய தந்திரத்தால் உருவாக்கப் பட்டது.

'சலார் டி உயுனி' இறுக்கமான உப்புக் கற்களால் ஆனவை. இந்த உப்பானது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வறண்டஏரியால் விட்டுச் செல்லப்பட்டது. மழைநீர் அதன் முழுமையான தட்டையான மேற்பரப்பில் சேகரிக்கப்படும்போது, அது சில செ.மீ. ஆழத்தில் ஒரு மெல்லிய, மென்மையான அடுக்கை உருவாக்குகிறது. அடுக்கு மிகவும் ஆழமற்றதாகவும் சமமாகவும் இருப்பதால் வானத்தை அப்படியே மிக அழகாகப் பிரதிபலிக்கிறது.

உப்பு மிகவும் வெண்மையாகவும் சமமாகவும் இருப்பதால் நாசா அதை செயற்கைக்கோள்களை அளவீடு செய்யப் பயன்படுத்தி வருகிறது. வறண்ட காலங்களில் கண்ணாடி மறைந்து உப்புப் படிகங்கள் முழு பரப்பளவும் பரவி உள்ளது. அப்போது சுற்றுலாப் பயணிகள் 'செல்பி' எடுக்கின்றனர். அதன் மீது வாகனங்களை ஓட்டுகின்றனர். மழைக்காலத்தில் மாயை திரும்புகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.