உயிர்பெற்று வந்த கதாபாத்திரங்கள்!
எழுத்தாளர் சிவசங்கரி எழுதியவற்றில் 'கழுதை தேய்ந்து', 'தலைவர் வருகிறார்', 'சண்டை', 'ஆயா', 'தெய்வம் நின்று கொல்லும்', 'தெப்பக்குளம்' ஆகிய ஆறு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை நாடகமாக்கி, சென்னை நாரத கான சபாவில் 'கோமல் தியேட்டர்ஸ்' நாடகக் குழுவினர் மேடையேற்றினர்.












