தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கர்நாடகத்தில் கரும்சிறுத்தைகள்

கர்நாடகத்தில் பெலகாவி மாவட்டத்துக்கு உள்பட்ட பீம்காட் வனவிலங்கு சரணாலயத்தில்தான் நாட்டிலேயே மிக அதிகமாக கரும் சிறுத்தைகள் உள்ளன.

News image
கரும்சிறுத்தை
Updated On :28 ஜூன் 2025, 6:38 pm

DIN

கர்நாடகத்தில் பெலகாவி மாவட்டத்துக்கு உள்பட்ட பீம்காட் வனவிலங்கு சரணாலயத்தில்தான் நாட்டிலேயே மிக அதிகமாக கரும் சிறுத்தைகள் உள்ளன. இதேபோல் உத்தர கன்னடாவில் அமைந்துள்ள காளி புலிகள் சரணாலயத்தில் 200 சிறுத்தைகள் உள்ளன. அவற்றை பார்ப்பது அரிது.

கபிணியில் உள்ள ஒரு ஏரியில் 'சாயா' என்ற கரும்சிறுத்தை தண்ணீர் குடிப்பதை ஒருவர் 'கிளிக்' செய்து வெளியிட்டார். இதனை பார்க்க விரும்பி கபிணி பகுதிக்கு ஏராளமானோர் வந்தனர். 20152022இல் அது வலிமையுடன் கம்பீரமானது. கபிணியில் அதன் ராஜ்யம்தான்.அந்த நிலையில் கடைசியாகப் பார்த்தபோது, அதன் வயது பதிமூன்று இருக்கும் என மதிப்பிட்டனர்.

பிறகு அதை காணவில்லை.

பொதுவாக, சிறுத்தைகள் 1214 வயது வரை தான் வாழ்கின்றன. பத்ரா பகுதி உப்பங்கழியின் கரையில் சிறுத்தை குடும்பத்தை இதுவரை மொத்தம் ஆறு தடவை பார்த்துள்ளனர். இந்தக் குடும்பத்தில் ஒரு கருமையான குட்டி ஒன்று துல்லிக் குதித்து ஓடுவதையும் பார்த்துள்ளனர். தற்போது அது தான் டார்கெட். கருப்பு வண்ணச் சிறுத்தை குட்டிக்கு வயது 34 மாதங்கள்தான் இருக்கும் என கணித்துள்ளனர்.மூன்று சிறிய சிறுத்தை குட்டிகள் இணைந்து விளையாடியுள்ளன.

அதில் ஒன்று தான் கருப்பு. கருப்புச் சிறுத்தை ஒரு தனி இனம் அல்ல.அவையும் சிறுத்தை தான். அவற்றின் தோல்கள், ரோமங்கள் அதிகப்படியான கருமை நிறமியை வெளிப்படுத்துகின்றன. அது மெலினிசம் என அழைக்கப்படும் நிலை.இது அவற்றின் மீது ஒளி ஒரு கோணத்தில் மேலே தாக்கும் போது அப்படி தெரிகிறது என வன காப்பாளர்கள் கூறுகின்றனர்.

உலகில் உள்ள 33 காட்டின பூனைகளில் உருவத்தில் பதிமூன்றில் மட்டுமே கருப்பு நிறம் பதிவாகியுள்ளது. இந்தியாவைத் தவிர, மலேசியாவின் சில பகுதிகளிலும், இந்தோனேஷியாவின் ஜாவாவிலும், கென்யா, தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கரும் சிறுத்தைகள் காணப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.