தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வாசுகி சரக்கு ரயில்...

'வாசுகி' என்பது கடலில் வாழும் மிகப் பெரிய பாம்பு என்று புராணங்களில் குறிப்பிடப்படுகின்றன.

News image
Updated On :12 ஜூலை 2025, 6:31 pm

'வாசுகி' என்பது கடலில் வாழும் மிகப் பெரிய பாம்பு என்று புராணங்களில் குறிப்பிடப்படுகின்றன. இந்தப் பெயரை ஒரு சரக்கு ரயிலுக்கு வைத்திருக்கின்றனர்.

தென் கிழக்கு மத்திய ரயில்வேக்கு உள்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாய் நகரிலிருந்து பிலாஸ்பூர் நகருக்குச் செல்லும் சரக்கு ரயில்தான் இந்தியாவின் மிக நீண்ட, மிக கனமான சரக்கு ரயில். ஆகவேதான் இந்தப் பெயர்.

இந்த ரயிலை 6 இஞ்சின்கள் 295 சரக்கு பெட்டிகளுடன் இழுத்துச் சென்று ஏழு மணி நேரத்தில் 224 கி.மீ. தூரத்தைக் கடக்கிறது. 2021ஜனவரி 22இல் இருந்து ஓடும் இந்த ரயில் மொத்தம் 3.5 கி.மீ. நீளம் கொண்டது. ஒரு சராசரி ரயில் நிலையத்தில் நுழைந்து வெளியேற நான்கு நிமிடங்கள் ஆகும். 295 சரக்கு பெட்டிகளில் மொத்தம் 27 ஆயிரம் டன் கரி அனுப்பப்படுகிறது.

இந்த நிலக்கரி 3 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி நிலையத்தின் ஒரு நாள் எரி பொருள் தேவை. இந்தியாவில் ஒரு சராசரி சரக்கு ரயிலானது 5860 வேகன்கள் மூலம் 3,800 டன் நிலக்கரியை எடுத்துச் செல்லும். இத்தனைக்கும் வாசுகி சரக்கு ரயிலில் ஒரு முதன்மை டிரைவர், ஒரு உதவி டிரைவர், ஒரு கார்டு மட்டுமே உள்ளனர். ஆறு எஞ்சின்களை சரக்கு வாகனங்களுடன் ஒன்றின் பின் ஒன்றாக இணைத்து அனுப்புகின்றனர்.

இதனால் இந்த ரயில் தடம் புரளுவதோ,வளையும்போதோ அல்லது கப்பிலிங்கால் பிரச்னைகளோ எழுவதில்லை. இதனால் எரிபொருள் சேமிப்பதோடு, ஊழியர்கள் எண்ணிக்கையும் குறைவாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.