சிவகார்த்திகேயனின் "மாவீரன்' இசை வெளியீட்டு விழாவை இன்னும் சில நாள்களில் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் கோலாகலமாக நடத்தவிருக்கிறார்கள். விஜய்யின் "பிகில்' படத்தின் இசை வெளியீடும் அங்கேதான் நடந்தது. இதைப் போல சிவாவின் "அயலான்' இசை வெளியீட்டை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடத்தவும் திட்டமிட்டு வருகிறார்கள். "அயலான்' படத்துக்குப் பிறகு தமிழில் ஒரு ரவுண்ட் வரலாம் என நினைக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.
---------------------------------------------
சமூக வலைதளங்கள் முழுக்க தமன்னா தரிசனம்தான். கவர்ச்சி உடைகளில் தமன்னா சகட்டுமேனிக்குப் புகைப்படங்களை இறக்க, அம்மணியின் மவுசு எகிறத் தொடங்கியிருக்கிறது. "ஜெயிலர்' படத்தில் ரஜினியுடன் ஜோடி போடுவதால் அவர் மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறார். ஹீரோயின் மைய கதைகளை இப்போதைக்குத் தவிர்க்க நினைக்கும் தமன்னா, முன்னணி நாயகர்களுடன் ஜோடி போடவே விரும்புகிறாராம். "ஜெயிலர்' படத்தில் இணைந்த போது பேசப்பட்ட சம்பளம் பட ரிலீஸ் நேரத்தில் இரு மடங்காக உயர்ந்திருக்கிறதாம்.
---------------------------------------------
"முண்டாசுப்பட்டி' படத்தை அடுத்து, "ராட்சசன்' என்கிற பக்கா த்ரில்லர் படத்தைக் கொடுத்து தமிழ்த் திரையுலகை நம்பிக்கையாக நிமிரவைத்த இயக்குநர் ராம்குமார். தனுஷை நம்பிப் பல வருடங்களை வீணடித்துவிட்ட விரக்தியில், இப்போது மறுபடியும் விஷ்ணு விஷாலிடமே திரும்பச் சென்றிருக்கிறாராம். "முண்டாசுப்பட்டி 2' எடுக்கலாம் என இருவருமே முதலில் நினைத்தார்களாம். ஆனால், கதை அவ்வளவு திருப்தியாக அமையாததால், தனுஷுக்கு ரெடி செய்த கதையில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம் விஷ்ணு விஷால். அட்டகாசமான ஆக்ஷன் கதையாம்.
---------------------------------------------
தம்பி ராமையாவின் மகன் உமாபதி, சில படங்களில் நாயகனாக நடித்திருப்பவர். விரைவில் திரைக்கு வரவிருக்கும் "ராஜா கிளி' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். விஷாலின் ஜோடியாக "பட்டத்து யானை' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா அர்ஜுன். நடிகர் அர்ஜுனின் மகள் இவர். உமாபதி, ஐஸ்வர்யா இருவரும் பல மாதங்களாகக் காதலித்து வருவதாகவும், இருவீட்டார் சம்மதத்துடன் விரைவில், இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
---------------------------------------------
பிரித்விராஜ் "விலாயத் புத்தா' என்ற படத்தில் நடித்த போது, சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பில் எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தனக்கு நேர்ந்த விபத்து குறித்து பிரித்விராஜ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், "" படத்தின் சண்டைக் காட்சியைப் படமாக்கும் போது எனக்கு விபத்து ஏற்பட்டது. இனி இரண்டு மாதங்களுக்கு ஓய்வு மற்றும் பிசியோதெரபிதான் மேற்கொள்ள வேண்டும். விரைவில் மீண்டு வருவேன். இந்த நிமிடங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த விரும்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் 2 நாள்களுக்கு இரவு நேர போக்குவரத்துக்குத் தடை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


