பத்தாம் வகுப்பு தேர்வு தேர்ச்சி பெறுவது ஒரு மாணவனின் வாழ்க்கையில் மிக முக்கிய கட்டம்தான். தேர்ச்சி அடையாதவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற முடியாமல் போனவர்கள் தவறான முடிவுக்குச் சென்றுவிடுகின்றனர். ஆனால், மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற ஒருவர், பிற்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஆகியுள்ளார்.
குஜராத்தில் பருச் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரியும் துஷார் டி சுமேரா, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தேர்வு பெற எவ்வளவு குறைந்தபட்ச மதிப்பெண்கள் எடுக்க வேண்டுமோ அதை மட்டுமே எடுத்துள்ளார். ஆங்கிலத்தில் 35 மதிப்பெண்களையும், கணக்கில் 36 மதிப்பெண்களையும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ""இவ்வளவு குறைந்த மதிப்பெண்கள் பெற்று மேற்கொண்டு என்ன படித்துக் கிழிக்கப்போகிறாய்'' என்று பலரும் கேலியும் கிண்டலும் செய்தனர். இதனால் அவர் துவண்டுவிடவில்லை.
""பத்தாம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியுள்ளேன் .
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வேன். தொடர்ந்து உழைப்பேன். அதிக மதிப்பெண்கள் பெறுவேன்'' என்று துஷார் தீர்மானித்தார்.
பின்னர், அடுத்தடுத்தத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள்தான்! பட்டப் படிப்பு படித்து ஆசிரியராகப் பணிபுரிந்து, பின்னர் ஐஏஎஸ் தேர்வுக்காக தன்னைத் தயார் செய்து தேர்ச்சி பெற்றார். மாவட்ட ஆட்சியராகவும் தேர்வு பெற்று பொறுப்பில் உள்ளார்.
""பத்தாம் வகுப்பில் பெற்றிருந்த மிகக் குறைந்த மதிப்பெண்கள் எனக்கு எந்த வகையிலும் தடைக் கற்களாய் மாறவில்லை. அதையே நினைத்துத் தளர்ந்து போகாமல், மீண்டும் கவனத்துடன் படித்து அடுத்தடுத்த தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதுதான் குறிக்கோளாக இருக்கவேண்டும். அதற்காகத்தான் நான் பெற்ற மிகக் குறைந்த மதிப்பெண்களை சமூக தளங்களில் பரப்பினேன். பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஒரு முடிவல்ல! ஒரு தொடக்கமே என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


