எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: செரிமானம் விரைவில் ஏற்பட...?

என் வயது 53. காலையில் உண்ணும் சிற்றுண்டியில் ஏற்படும் விருப்பம் மதிய உணவில் ஏற்படுவதில்லை. அப்படி சாப்பிட்டாலும் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரமாகிறது.  செரிமானம் விரைவில் ஏற்பட என்ன செய்ய வேண்டும்.

News image
Updated On :18 டிசம்பர் 2022, 12:30 am

என் வயது 53. காலையில் உண்ணும் சிற்றுண்டியில் ஏற்படும் விருப்பம் மதிய உணவில் ஏற்படுவதில்லை. அப்படி சாப்பிட்டாலும் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரமாகிறது.  செரிமானம் விரைவில் ஏற்பட என்ன செய்ய வேண்டும்.

-கார்த்திகேயன்,
நன்னிலம்.

தனியா எனும் கொத்தமல்லி விதையும் சுக்கும் சேர்த்து காய்ச்சப்படும் தண்ணீர், மதிய உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாக, நீங்கள் குடித்துவந்தால் காலைச் சிற்றுண்டி விரைவில் செரிமானமாகவும், மதிய உணவின் மீது விருப்பம் ஏற்படவும் உதவும்.

12 கிராம் வீதம் தனியாவையும், சுக்கையும் எடுத்து 192 மில்லி தண்ணீரில் கலந்து கொதிக்கவிட்டு, 48 மில்லியாக வற்றியதும் வடிகட்டி, வெதுவெதுப்பாகத் தொடர்ந்து இருவாரங்களுக்கு நீங்கள் குடித்து வந்தால், செரிமானத்திற்கான சுரப்பிகளனைத்தும் விரைவாக சுரப்பதுடன், வயிறு சார்ந்த குடல் வலியையும், சிறுநீர்ப்பைச் சார்ந்த உடல் உபாதையையும் நன்கு நீக்கிட உதவும். சிறுநீர்ப் பையினுள் உள்பகுதியை சுத்தப்படுத்தி, அங்கு தேங்கி நிற்கும் கழிவுகளையும் விரைவாக வெளியேற்றும்.

மேற்குறிப்பிட்ட  சிகிச்சை முறையை பாவப்பிரகாசர் எனும் ஆயுர்வேத முனிவர் பரிந்துரை செய்திருக்கிறார். ஐந்து கிராம் கடுக்காய்த் தூளுடன் மூன்று கிராம் சுக்குப் பொடி, இரண்டு கிராம் இந்துப்புத் தூளையும் நூறு மில்லி தண்ணீருடன் கலந்து காலையில் சிற்றுண்டி சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன் பருகினால், வயிறு மற்றும் சிறுகுடல், பெருங்குடல் அடப்பாசம், வாயு அனைத்தும் கீழ் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டு, நல்ல மலக்கழிச்சலை ஏற்படுத்தி, வயிற்றை சுத்தம் செய்து, செரிமான சுரப்பிகளைத் தூண்டிவிட்டு, காலைச் சிற்றுண்டியை விரைவில் செரிக்க வைத்து, மதிய உணவின் மீது நாட்டம் கொள்ளச் செய்யவும் உதவிடும் என்பதால்,  இதையும் நீங்கள் குடிப்பதற்கு முயற்சிக்கலாம். இந்த அறிவுரையையும் பாவபிரகாசரே செய்திருக்கிறார்.

சிற்றுண்டியில் ஏற்படும் விருப்பம் மதிய உணவின் மீது ஏன் ஏற்படவில்லை என்பதையும் நாம் அறிவது நலம்.  காலைச் சிற்றுண்டியாக நாம் சாப்பிடும் பூரி- மசால் கிழங்கு, இட்லி- மிளகாய்ப் பொடி+ நல்லெண்ணெய் , தேங்காய் சட்னி, சின்ன வெங்காயச் சாம்பார், இடியாப்பம்- தேங்காய்ப் பால், பரோட்டா- குருமா, பொங்கல், வடை, சட்னி, சாம்பார் போன்றவற்றிலிருந்துவரும் மணம், சுவை, சூடு ஆகியவற்றால் நாவிலுள்ள ருசி கோளங்கள் சுறுசுறுப்படைகின்றன.  எச்சில் சுரப்பிகள் வேகமாக எச்சிலை சுரக்கச் செய்கின்றன. வயிற்றுலுள்ள அமிலச் சுரப்பிகள், சிற்றுண்டியைப் பார்த்த அடுத்த விநாடியே சுரக்கின்றன. நரம்பு மண்டலங்கள் வழியாக இவை அனைத்தும் நிமிட நேரத்தில் நடந்துவிடுகின்றன. அதே நாடி நரம்புகள்தான் மதிய உணவையும் பார்க்கின்றன. ஆனால், விருப்பம் கொள்ளவில்லை. அதற்குக் காரணம் அதன் விருப்பத்துக்குக் காரணமான காலைச் சிற்றுண்டியை முன்பே சுவைத்துவிட்ட படியால், இதன் மீது ஏனோ நாட்டம் பிறக்கவில்லை. காலைச் சிற்றுண்டியைவிட, அதிகம் சத்து நிறைந்த மதிய உணவின் மதிப்பை இக்காரணத்தினால் நாம் இழக்கிறோம். அதனால் காலைச் சிற்றுண்டியை நிறுத்திவிட்டால் எப்படி இருக்கும்?

மதிய உணவை சற்று முன்பே காலையில் கொண்டுவந்து சாப்பிட்டால் சில மாதங்களில் வெறுப்பு மாறி, விருப்பம் ஏற்படும். ஆனால் பலருக்கும் இதில் உடன்பாடு இருக்காது. இட்லி, தோசை, பொங்கல், பூரி மீது அத்தனை விருப்பம்.  அவர்களுக்கு மதிய உணவை காலை, மதியத்தின் இடையே சாப்பிட்டு, இரவு உணவை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல், இரவு உறக்கத்துக்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே சாப்பிட்டுவிட்டால், செரிமானத்திற்கான மருந்துகளின் தேவையிருக்காது.

உணவு சத்து முழுவதும் உடலில் ஒட்டும். சக்கை அனைத்தும் நன்கு வெளியேறிவிடும். சிற்றுண்டியை அறியாத நம் முன்னோர் வாழ்வை நீங்களும் பின்பற்ற முயற்சிக்கலாமே!.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.