சிற்றுண்டியில் ஏற்படும் விருப்பம் மதிய உணவின் மீது ஏன் ஏற்படவில்லை என்பதையும் நாம் அறிவது நலம். காலைச் சிற்றுண்டியாக நாம் சாப்பிடும் பூரி- மசால் கிழங்கு, இட்லி- மிளகாய்ப் பொடி+ நல்லெண்ணெய் , தேங்காய் சட்னி, சின்ன வெங்காயச் சாம்பார், இடியாப்பம்- தேங்காய்ப் பால், பரோட்டா- குருமா, பொங்கல், வடை, சட்னி, சாம்பார் போன்றவற்றிலிருந்துவரும் மணம், சுவை, சூடு ஆகியவற்றால் நாவிலுள்ள ருசி கோளங்கள் சுறுசுறுப்படைகின்றன. எச்சில் சுரப்பிகள் வேகமாக எச்சிலை சுரக்கச் செய்கின்றன. வயிற்றுலுள்ள அமிலச் சுரப்பிகள், சிற்றுண்டியைப் பார்த்த அடுத்த விநாடியே சுரக்கின்றன. நரம்பு மண்டலங்கள் வழியாக இவை அனைத்தும் நிமிட நேரத்தில் நடந்துவிடுகின்றன. அதே நாடி நரம்புகள்தான் மதிய உணவையும் பார்க்கின்றன. ஆனால், விருப்பம் கொள்ளவில்லை. அதற்குக் காரணம் அதன் விருப்பத்துக்குக் காரணமான காலைச் சிற்றுண்டியை முன்பே சுவைத்துவிட்ட படியால், இதன் மீது ஏனோ நாட்டம் பிறக்கவில்லை. காலைச் சிற்றுண்டியைவிட, அதிகம் சத்து நிறைந்த மதிய உணவின் மதிப்பை இக்காரணத்தினால் நாம் இழக்கிறோம். அதனால் காலைச் சிற்றுண்டியை நிறுத்திவிட்டால் எப்படி இருக்கும்?