உணவின் செரிமானத்தில் வெளியாகும் சத்தான நீர்ப்பகுதியில் இனிப்பின் பகுதியை அதிகரிக்கும் வெல்லம், சர்க்கரை, புதிய அரிசி, கோதுமை, மாவுப் பண்டங்கள், எருமைப்பால், தயிர், மீன், மாமிசம், கொழுப்பு ஆகியவற்றின் அதிக சேர்க்கையாலும், அந்த இனிப்பானது ரத்தம், மாமிசம், மேதஸ் எனும் தாதுக்களில் உள்நுழையும்போது, அதை செரிமானம் செய்யும் நெருப்பின் அம்சம் குறைவாக உள்ளபோது, சரிவர செரிக்காமல், அந்த தாதுக்களே, அந்த இனிப்பை, உடலின் திரவமான கழிவுப் பொருளில், முக்கியமாக சிறுநீரின் வழியே வெளியேற்றுகிறது. அதனால் சிறுநீரில், சர்க்கரையின் வெளியேற்றத்தைத் துரிதப்படுத்தும் தாதுக்களின் நெருப்பு பலக்குறைவை சரி செய்வதை முதல் சிகிச்சையாகச் செய்தால்தான், தங்களுக்கு சிறுநீரில் வெளியேறும் கழிவுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து வெளியேற்ற முடியும்.