பெருங்குடல், இடுப்பு, தொடைப்பகுதி, காது, எலும்புகள் மற்றும் தோல் ஆகிய பகுதிகள் இயற்கையாகவே வாயுவினுடைய இருப்பிடங்களாகும். அதிலும் முக்கியமாக பெருங்குடல் பகுதி வாயுவின் ஆதிக்கம் அதிகமுள்ள இடமாகும். வாயுவினுடைய குணங்களாகிய வறட்சி, லேசு, குளிர்ச்சி, முறமுறப்பு, நுண்ணியது, அசையும் தன்மை ஆகியவற்றால் மழை பனி நாட்களில் அவற்றின் அளவு உடலில் கூடுவதால், தசைப்பிடிப்பும் மூட்டுப்பிடிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன. வாயுவின் குணாதிசயங்களை மட்டுப்படுத்தும் இந்துகாந்தம் நெய் மருந்து, தசமூலாரிஷ்டம், வாயுகுளிகை, மூலிகைத் தைலங்கள் போன்றவற்றின் பயன்பாடு, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் நன்மை தரும்.