"இந்தியா' வார இதழ் மற்ற பத்திரிகைகளில் இருந்து அது வெளியிடும் செய்திகளிலும், கருத்துகளிலும், விமர்சனத்திலும், மொழி நடையிலும் வித்தியாசப்பட்டிருந்தது. கட்டுரை எழுதியவர் பெயர் இல்லை. ஆனால், அதில் வெளிவந்த கவிதைகளில் மட்டும் சி.சுப்பிரமணிய பாரதி என்று பெயர் போடப்பட்டிருந்தது. ஆனால் "இந்தியா'வின் உண்மையான ஆசிரியராக பாரதியார்தான் இருந்தார். சுதேசமித்திரனில் பணியாற்றி அவர் தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்று வந்த அவர் பூரண சுதந்திரப் போராட்ட சிந்தனையாளராக உருவாகியிருந்தார். அவர் படித்த ராய்ட்டர் செய்திகள், பத்திரிகைகள், கவிதை, கட்டுரை புத்தகங்கள் அவரிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.