பற்களின் கூரான தன்மையினாலும், வாயினுடைய உமிழ்நீர் சுரப்பு குறைந்து போவதினாலும் வாயில் ஏற்படும் வேக்காளத்தினால் நீங்கள் குறிப்பிடும் கொப்புள உபாதையானது தலை தூக்கக் கூடும். பல் மருத்துவரிடம் சென்று பற்களின் கூரான தன்மையை நீக்குவதும், வாயினுடைய உமிழ்நீர் சுரக்கும் ஊற்றுக் குழியை மேம்படுத்தும்வகையில் சிறிது பாலில் தேன் கலந்து வாய் கொப்பளிப்பதும், தேனை மட்டுமே வாயிலிட்டுக் கொப்பளிப்பதும் உபகாரமாய் இருக்கும். கருங்காலிக்கட்டை, நால்பா மரப்பட்டை எனப்படும் ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்திப்பட்டை, இத்திப்பட்டை மற்றும் வேலம் பட்டை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகைத் தண்ணீரால் வாய் கொப்பளிப்பதால் வாய்க் கொப்பளங்கள் ஏற்படாமல் நம்மால் பாதுகாக்க முடியும். இவை வாயில் உள்ள பல், மேல் அண்ணம், உமிழ்நீர், நாக்கு ஆகிய பகுதிகளில் ஏற்படக்கூடிய பல உபாதைகளையும் நீக்கக் கூடிய திறன் உடையது.