ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்

துவரம் பருப்பை வேக வைக்கும்போதே தேங்காய் துண்டு ஒன்றை நறுக்கிப் போட்டால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:55 am

ஆர். ஜெயலட்சுமி

*  துவரம் பருப்பை வேக வைக்கும்போதே தேங்காய் துண்டு ஒன்றை நறுக்கிப் போட்டால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும். வெண்ணெய்போல குழைவாக இருக்கும்.

*  கைகள் புக முடியாத கண்ணாடி பாட்டில்களில் அடியில் காணப்படும் கறைகளை அகற்ற எலுமிச்சம் பழத்தின் சிறு சிறு துண்டுகளைப் போட்டு அதில் பாதிக்கு மேல் தண்ணீர் விட்டு குலுக்கவும்.

*  சாம்பார் நன்றாக கொதித்து இறக்கியவுடன் அதில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயையும் கறிவேப்பிலையும் போட்டு மூடி வைத்தால் சாம்பார் வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும்.

*  எலுமிச்சை, தேங்காய் சாதங்களில் கொஞ்சம் வறுத்த வேர்க்கடலையை ஒன்றிரண்டாக பொடி செய்து போட்டால் சாதம் மிகவும் ருசியாக இருக்கும்.

*  எந்த ரசம் வைத்தாலும், ரசம் கொதிக்கும் நிலையில் அரைப்பிடி புதினா இலைகளை போட்டால் ரசம் மணக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.