புஷ்யாணுகம் எனும் ஆயுர்வேத சூரண மருந்து உங்களுக்குப் பயன்படலாம். ஒரு ஸ்பூன் (5 கிராம்) சூரணத்தை 1 1/2 ஸ்பூன் தேன் விட்டுக் குழைத்து 1/2 ஸ்பூன் அரிசி கழுவிய தண்ணீருடன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, அதிக ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும். சதாவரீகுலம் எனும் லேகிய மருந்தை மதிய உணவுக்கு முன் சாப்பிட, கருப்பையைச் சார்ந்த உதிரப் போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவையை மட்டுப்படுத்தும். தான்வந்திரம் எனும் தைலத்தை வாரம் இருமுறை அதாவது, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் உடலெங்கும் தேய்த்து குளித்துவர, உடல் வலியைப் போக்கிக் கொள்ளலாம். குமார்யாஸவம் எனும் மருந்தை சுமார் 6 ஸ்பூன் (30 மி.லி) காலை இரவு சாப்பிட்டு வர, பசி நன்றாக எடுக்கும். உதிரப் போக்கைச் சரியான அளவில், நேரத்தில் வரும்படி உடலை அமைத்துக் கொடுக்கும்.