நீங்கள் முட்டை வடிவில் உள்ள பார்லி சாப்பிடுவது நல்லது. இதன் முழு அரிசியைக் கஞ்சியாக்கி அதன் தெளிவை காலையில் பருகலாம். மோருடன் சேர்த்துப் பருகினால், சிறுநீரை அதிக அளவில் பெருக்கி வெளியேற்றும். கிருமித் தொற்றும் இதன் மூலம் விலகுவதால் இரவில் அடிக்கடி சிறுநீர் போகும் உபாதை குறையும். அதுபோல, காராமணியைச் சுண்டலாகச் சாப்பிடுவதால், அது சிறுநீரை நன்றாக வெளியேற்றும். கொள்ளை 10 பங்கு தண்ணீரில் நீர்த்த கஞ்சியாக்கி இந்துப்பு சேர்த்துச் சாப்பிட, சிறுநீரகங்களின் உள்ளே புகுந்து, அங்குள்ள கற்கள், கிருமித் தொற்று போன்றவற்றைச் சுரண்டி வெளியாக்கும். அதுபோல, பசலைக் கீரையை உணவில் அடிக்கடி சாப்பிட்டு வர, நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு, இன்ஃபெக்ஷன் ஆகியவற்றைப் போக்கும். சுரைக்காய், சிறுநீரக உபாதைகளில் ஏற்படும் பல உபாதைகளை நீக்கக் கூடியது. பழங்களில் நாவல்பழம் சாப்பிட நல்லது. பீர்க்கங்காய் துவையலும் நீங்கள் சாப்பிட நல்லது.