பெரியவன் ஆகும் வழி?
சுவாமி ராமதீர்த்தர் கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அவர் மாணவர்களுக்கு ஒருநாள் கற்பித்துக் கொண்டிருக்கையில் கரும் பலகையில் ஒரு கோடு வரைந்தார். பின்னர் ஒரு மாணவனை அழைத்து, ""இக்கோட்டைச் ச


சுவாமி ராமதீர்த்தர் கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அவர் மாணவர்களுக்கு ஒருநாள் கற்பித்துக் கொண்டிருக்கையில் கரும் பலகையில் ஒரு கோடு வரைந்தார். பின்னர் ஒரு மாணவனை அழைத்து, ""இக்கோட்டைச் சிறியதாக்கு'' என்று கூறினார்.
அம்மாணவன் வேகமாக வந்து கரும்பலகையின் பக்கம் போய் அவர் வரைந்திருந்த கோட்டின் நீளத்தை அழிக்க முனைந்தான்.
அதைக் கண்ட சுவாமிகள்,""மாணவனே நில். நான் கோட்டைச் சிறிதுபடுத்தச் சொன்னேனே தவிர, அதை அழிக்கச் சொல்லவில்லையே'' என்றார்.
கோட்டை அழிக்கவும் கூடாது, அதைச் சிறிதாக்கவும் வேண்டும். இதை எப்படிச் செய்வது?
மாணவர்கள் ஒன்றும் புரியாது திகைத்துக் கொண்டிருந்தார்கள். இந்நேரம் மற்றொரு மாணவன் கரும்பலகையின் பக்கம் வந்து அதில் வரைந்திருந்த கோட்டின் அருகில் அதைவிடவும் நீளமான இன்னொரு கோட்டை வரைந்தான்.
இம்மாணவனின் செயல் சுவாமிகளுக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது. இம்மாணவனின் அறிவுக்கூர்மையை அவர் தமக்குள் வியந்து கொண்டார்.
அவர் ஏனைய மாணவர்களைப் பார்த்து, ""இதோ பாருங்கள். இந்தக் கோடு நமக்கு என்ன அறிவிக்கின்றது? வாழ்க்கையில் ஒருவன் பெரியவன் ஆக விரும்பினால் அவன் மற்றவர்களை மறைக்கவோ, அழிக்கவோ நினைக்கக் கூடாது என்பதைத்தான் இது சொல்கிறது. பெரியவன் ஆக விரும்புகிறவன், பெரிய வேலைகளைச் செய்தே அந்நிலையை அடைய வேண்டும்'' என்று விளக்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...