முழு பச்சைப் பயறு ஒரு பங்கு, உலர்ந்த எலுமிச்சம்பழத்தின் தோல் அரைப்பங்கு, வெந்தயம் கால் பங்கு அரைத்துச் சலித்து, சாதம் வடித்த கஞ்சியில் கலக்கி, எண்ணெய் பிசுக்கு, அழுக்குப் போக்கலாம். அதற்கு இது சிறந்த பொடியாகும். சந்தனக்கட்டையை அரைத்த சந்தனத்தூள் ஒரு பங்கு, நல்ல மைதா மாவு ஒரு பங்கு இரண்டையும் சேர்த்துத் துணியில் சலித்து, சிட்டிகை அசல் பச்சைக் கற்பூரம், இரண்டு சிட்டிகை அசல் குங்குமப்பூவும் நன்றாய்ப் பொடித்துக் கலந்து, குழந்தையைக் குளிப்பாட்டிய பிறகு, உடலில் பவுடர் போலத் தூவுவதால் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் வளரும். சொறி சிரங்கு கரப்பான் வராது.