மேற்கண்ட சிகிச்சை முறைகளை நீங்கள் ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கிச் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இப்பிரிவுகளில் எது உகந்தது என்பதை மருத்துவர்களே தீர்மானிக்கட்டும். உணவில் நீங்கள் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள், காலையில் ஒரு கைப்பிடியாக வகைக்கு, கொள்ளு, காராமணி, பார்லி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை எடுத்துத் தனித்தனியாக வெள்ளைத் துணியால் மூட்டை கட்டி, 3 லிட்டர் தண்ணீரில் வேக வைத்து, அரை லிட்டராகக் குறுகியதும், துணி மூட்டைகளை அகற்றி கஞ்சியின் சூடு அடங்கியதும் 1 ஸ்பூன் சுத்தமான தேன் கலந்து சாப்பிடவும். கல்லீரல் அடைசல், பித்தப்பை டஞகவடந ஆகியவற்றை இந்த உணவு வகை, உரசி வெளியேற்றும். நெருப்பு, வாயு, ஆகாயத்தை அதிகம் கொண்ட உணவு வகை என்பதால், நிலம், நீரின் ஆதிக்கத்தை வெளியேற்றும் திறன் கொண்டது. மதிய உணவாகச் சிறிது சாதம், சாம்பார் சாதம், மோர் என்று சாப்பிட்டு, தேன் கலந்த தண்ணீரைச் சிறிது பருகவும். இரவில் கோதுமையினால் தயாரிக்கப்படும் வகையறாக்களை மட்டுமே சாப்பிட்டு, தெளிந்த மோரைப் பருகவும். கறிவேப்பிலை, சுக்கு, கடுக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் "காலசாகாதி' எனும் கஷாய மருந்தைக் காலை, மாலை வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிடவும்.