ஆக, உங்களுடைய விஷயத்தில் வியான, அபான வாயுக்களின் செயல் திறனைக் கூட்டி, மோட்டார் மூலம் வெளியேறும் தாழ்வான நீரைப் போல, கணுக்கால் வீக்கத்தை நீக்க முயற்சி செய்ய வேண்டும். வியான வாயுவின் இருப்பிடம் இதயம் என்பதால், இதயத்தின் வேலைத் திறனை மேம்படுத்தினால், வியான வாயுவின் இருப்பிடம் உறுதிப்படுத்தப்படுகிறது. தசமூலம் எனும் ஓர் ஆயுர்வேத கஷாய மருந்து இருக்கிறது. 15 மி.லி. கஷாயத்தில் 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து, சிட்டிகை பெருங்காயம் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சுமார் 48 நாட்கள் சாப்பிட்டு வர, இதயத்தைச் சார்ந்த தசைகளும், நார்களும், நரம்புகளும், குழாய்களும் வலுப்படும்.