அதனால் நீங்கள் உடனடியாக மூலமுளைகள் எந்தப் பகுதியில் உள்ளன. அவற்றின் வேர்கள் எங்கெல்லாம் செல்கின்றன. பெüத்திரம் வந்துள்ளதா? போன்றவற்றை அறியும் நவீன கருவிகளின் வழியாகத் தெரிந்து கொண்டு, அதன்பிறகு சிகிச்சை மேற்கொள்வதே நலம் என்பதால், நோயின் தன்மையை நன்றாக அறிந்து கொண்டு மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளவும். அதுவரை ஆயுர்வேத மூலிகை மருந்தாகிய அபயாரிஷ்டம், சுமார் 6 ஸ்பூன் (30 மி.லி.) காலை இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வரவும். திரிபலா எனும் சூரணத்தைச் சுமார் 15 கிராம் அளவில் எடுத்து, 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து அரை லிட்டர் ஆகும் வரை காய்ச்சி, குளிர்ந்த பிறகு, வடிகட்டி, ஆசன வாயை, மலம் கழித்த பிறகு கழுவுவதற்காகப் பயன்படுத்தி வரவும்.