எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

முகங்கள்: 110 வயது கொழும்புக்காரப் பாட்டி!

கொழும்புக்காரப் பாட்டி வீடு எங்கிருக்கிறது என்று கேட்டால் அந்த ஊரில் உள்ள சிறு குழந்தைகள்கூட காட்டிவிடும். 110 வயதாகும் அந்தப் பாட்டியைத் தெரியாதவர்கள் யாரும் அங்கு இருக்கமாட்டார்கள். அந்தப் பாட்டியின

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:23 am

கொழும்புக்காரப் பாட்டி வீடு எங்கிருக்கிறது என்று கேட்டால் அந்த ஊரில் உள்ள சிறு குழந்தைகள்கூட காட்டிவிடும். 110 வயதாகும் அந்தப் பாட்டியைத் தெரியாதவர்கள் யாரும் அங்கு இருக்கமாட்டார்கள். அந்தப் பாட்டியின் பெயர் ஞானவடிவு. திருநெல்வேலி காளத்திமடத்தில் வசித்து வருகிறார்.

 ""எனது சொந்த ஊர் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை. எனக்குக் காளத்திமடத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவருடன் திருமணம் ஆன உடன், நாங்கள் பிழைப்பிற்காக கொழும்பு சென்றுவிட்டோம். எனக்கு 2 ஆண்கள் உள்பட 9 பிள்ளைகள். தற்போது ஓர் ஆண் பிள்ளையும் 3 பெண் பிள்ளைகளும் மட்டுமே உயிருடன் உள்ளனர். நாங்கள் குடும்பத்துடன் காளத்திமடத்திற்கு வந்து குடியேறி சுமார் 50 ஆண்டுகள் இருக்கும். நாங்கள் கொழும்பில் வெகு காலம் இருந்து விட்டு இங்கு வந்து குடியேறியதால்,இங்கு எங்கள் வீட்டைக் கொழும்புக்காரர் வீடு என அழைப்பர். என்னைக் கொழும்புக்காரப் பாட்டி என்றும் அழைப்பார்கள்.

 இப்போது எனக்கு 110 வயதாகிறது. வீட்டில் சும்மா இருக்க எனக்குப் பிடிக்காது. தோசை சுட்டு தெருத்தெருவாக சென்று விற்று வந்துகொண்டிருந்தேன். மூன்று மாதத்திற்கு முன்பு தோசை விற்கப் போனபோது தெருவில் கீழே தவறி விழுந்து விட்டேன்.

 அதிலிருந்து சரியாக நடக்க முடிவதில்லை. இதனால் தோசை வியாபாரம் செய்யமுடியவில்லை. நன்றாகத் திடம் பெற்றதும் மீண்டும் வியாபாரத்தைத் தொடங்குவேன்'' என்கிறார் கொழும்புப் பாட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.