களைப்பு நீக்கும் ஆயுர்வேத மருந்துகளில் கெடுதி விளைவிக்காதது, நல்லதை நிலைத்திருக்கும்படி தருவது சியவனப்ராசம், தசமூலாரிஷ்டம், அச்வகந்தாரிஷ்டம் முதலியவை. பசியைத் தூண்டி உணவைச் செரிக்கச் செய்து தேய்வை ஈடுசெய்யுமாறு சத்து ஊட்டம் பெற வசதி தருவது வில்வாதி லேகியம், ஜீரக வில்வாதி லேகியம், மாகபில்வாதிலேகியம் முதலியன. மன நிம்மதியும், வலிவும் அளிப்பவை, இறைவனின் சிந்தனையும், பிறர் நல்வாழ்வு பெறச் சிந்திப்பதும், அவற்றிற்கான பணிகளில் ஈடுபடுவதும், தசைகளின் இறுக்கத்தைத் தளர்த்தி மன இறுக்கத்தைப் போக்க வல்லவை, வேகமாக ஓடும் ஆறு, அருவிகளில் ஆற அமர குளித்தல், எவ்வகைச் சிந்தனையுமின்றி காலாற நடப்பது, வாரமிருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, நல்லெண்ணத்துடன் பழகும் பெரியோர்கள், நண்பர்களுடன் நற்பணிகளில் ஈடுபடுவது போன்றவை களைப்பை நீக்கும் அமுத ரசாயனங்களாகும்.