* உணவில் உப்பு, புளி காரம் குறைக்கவும். மனம் அமைதியாக இருக்கும்படியான சூழ்நிலையில் வேலை செய்யவும். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பசி ஏற்படும் போது காலதாமதமின்றி உணவைச் சாப்பிடவும்.
* ருசி, பசி ஏற்படவும், ரத்தத்தில் உள்ள கேடு குறையவும், உடல் புஷ்டி பெறவும், வெள்ளைப்படுதல் குறையவும், அசோக மரம் மற்றும் கற்றாழையை முக்கிய மருந்தாகக் கொண்டு தயாரிக்கப்படும் அசோகாரிஷ்டம் மற்றும் குமார்யாஸவம் எனும் ஆயுர்வேத மருந்துகளை 15 மிலி கிராம் வீதம் கலந்து, மொத்தம் 30 மிலி காலை இரவு உணவிற்குப் பிறகு 21 நாட்கள் சாப்பிடவும். இதனால் நல்ல பசியும் ஏற்படும். அதன் பிறகு சதாவரீகுலம் எனும் லேகியத்தை 2 ஸ்பூன், காலை இரவு உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாக 21 நாட்கள் சாப்பிட்டு வரவும்.
(தொடரும்)