அதனால் நீங்கள் காலை உணவாக வெண்கலப் பாத்திரத்தில் அரிசியையும், தண்ணீரையும் சேர்த்துக் கொதிக்க விடவும். சாதம் வெந்து கொண்டிருக்கும்போது, முக்கால் பங்கு வெந்ததும் கொதித்துக் கொண்டிருக்கும் கஞ்சியைக் கரண்டியால் எடுத்து வைத்துக் கொண்டு இளஞ்சூடானநிலையில் அதில் வெண்ணெய், நெய் சேர்த்துக் காலையில் சாப்பிடவும். இதனால் குடல் வறட்சி நீங்கும். குடலிலுள்ள சூடு, மலச்சிக்கல், குடல் வறட்சியால் ஏற்படும் வலி, சிறுநீர் எரிச்சல், சிறுநீர்ச்சுருக்கு, வயிற்றுக் கொதிப்பு போன்றவை விரைவில் மாறிவிடும். உண்ட உணவின் சத்தானது, விரைவில் கல்லீரல் பகுதியில் சேர்க்கப்பட்டு அதன் மூலம் நீங்கள் உபாதையிலிருந்து விடுபட வாய்ப்பிருக்கிறது.