திரைக்கதிர்: இயக்குவதற்குத்தான் வந்தேன்!
பாலாவிடம் உதவியாளராகப் பணியாற்றி "ரெட்', "மாயாவி' போன்ற படங்களை இயக்கியுள்ள சிங்கப் புலி "நான் கடவுள்' படத்தின் மூலம் நடிகரானார். "மாயாண்டி குடும்பத்தார்', "கோரிப்பாளையம்' படங்களில் காமெடியில் கலக்கிய


பாலாவிடம் உதவியாளராகப் பணியாற்றி "ரெட்', "மாயாவி' போன்ற படங்களை இயக்கியுள்ள சிங்கப் புலி "நான் கடவுள்' படத்தின் மூலம் நடிகரானார். "மாயாண்டி குடும்பத்தார்', "கோரிப்பாளையம்' படங்களில் காமெடியில் கலக்கியதைத் தொடர்ந்து அவருக்கு நடிக்கவே அதிக வாய்ப்புகள் வருகின்றன. இனி நடிப்பு மட்டும்தானா? என்று கேட்டபோது...
""இயக்குநர் ஆகும் ஆசையில்தான் சினிமாத்துறைக்கு வந்தேன். 14 வருடங்கள் சினிமாவில் இருந்துள்ளேன். சில படங்களுக்கு வசனங்கள் எழுதினேன். தற்போது "அவன் இவன்', "நான் மகான் அல்ல', "தூங்கா நகரம்' உள்பட 14 படங்களில் நடித்து வருகிறேன்.
நடிப்பில் பிஸியாக இருந்தாலும் ஒரு புதிய படத்துக்கான ஸ்கிரிப்டையும் தயார் செய்துள்ளேன். முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கும் அந்தப் படத்தை செப்டம்பர் மாதம் தொடங்குகிறேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...