மனிதர்களுடைய குடல் நான்கு வகையில் மட்டுமே அமைய முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. வாத தோஷத்தின் ஆதிக்கத்தினால் குடல் வறட்சியாகவும், பித்த தோஷத்தின் ஆதிக்கத்தினால் மிருதுவாகவும், கபதோஷத்தின் ஆதிக்கத்தினால் நடுநிலையாகவும், தோஷங்கள் மூன்றும் சமமாக இருந்தால் குடல் நடுத்தரமாகவும் இருக்கும். உங்களைப் பொறுத்தவரை குடல் பித்தத்தினால் மிருதுவாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. வயிற்றில் காரமான உணவு வந்து சேர்ந்தவுடன், பித்தத்தின் குணங்களாகிய லேசான பசை, கூர்மை, சூடு, இளகும் தன்மை, பெருகும் தன்மை போன்றவை குடலின் இயற்கையான தன்மையினால் உடனடியாகத் தூண்டப்பட்டு, ரத்தம் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, தலையில் தோலின் அடியிலுள்ள வியர்வைக் கோளங்களை உசுப்பேற்றி, அங்குள்ள நீரை வெளியே தள்ளுகிறது.