குளிர்ச்சியான ஒரு பொருள், உடல் சூட்டை அதிகரிப்பதும், சூடான பொருள், குளிர்ச்சியைத் தருவதுமான விசித்திரமான வித்தியாசங்களை ஆயுர்வேதம் சில உதாரணங்களோடு எடுத்துக் கூறுகிறது. அவற்றை நன்றாகத் தெரிந்து உபயோகிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. உதாரணத்திற்கு, "எள் உள் உபயோகத்தினால் புத்தியின் ஞாபக சக்தியை வளர்க்கிறது. குளிர்ந்த வீரியத்தை உடையது. குளிர்ச்சியும் செய்கிறது. ஆனால் எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் புத்தியின் ஞாபக சக்தியை வளர்க்கும் தாய்க் குணத்தை மட்டும் கொண்டுள்ளது. ஆனால் வீரியத்தில் உஷ்ணமாக மாறிவிடுகிறது, உள்ளுக்குச் சாப்பிடும்போது. இது மட்டுல்ல, எள்ளுக்கும் அதில் பிறக்கும் எண்ணெய்க்கும் வித்தியாசம். எள் உள் உபயோகத்தில் உடலில் கபத்தை அதிகப்படுத்துகிறது. ஆனால் அதன் எண்ணெய் நேர்மாறுதலாக கபத்தைக் குறைக்கிறது.