போதுமான அளவு அவள் உணவை விரும்பிச் சாப்பிடுகிறாளா? படிப்பில் செலுத்தும் கவனம், உணவிலும் இருக்க வேண்டும். அவள் உண்ணும் ஆகாரம், காய்கறி, மாமிசம், அரிசி, கோதுமை என்று எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் ஜீரண உறுப்புகள் என்ற ரசாயன சாலையில் உடலுக்குத் தேவையானால் பொருள்களாகப் பிரிக்கப்பட்டு, தாது பரிணாமம் செய்யும் கல்லீரல் முதலிய ரசாயன சாலைகளில் ரசாயன மாற்றங்களை அடைந்து அந்தந்த அவயவங்களுக்குத் தகுந்த மாதிரி மாற்றப்பட்டு ரத்தத்தின் மூலமாகச் செலுத்தப்படுகிறது. சர்க்கரைச் சத்தின் மூலப் பொருளாகிய க்ளைகோஜின், தசை நார்கள் உழைக்கும் போது, சர்க்கரையாக மாற்றப்பட்டு உபயோகப்படுத்தப்படுகிறது. அதன் கழிவானது, ரத்தத்தில் சேர்ந்து வெளியே தள்ளப்படுகிறது. இவற்றை மாற்றுவதில் நமது மூச்சுக் காற்றாகிய பிராண வாயு மிகவும் உபயோகமாகிறது.