செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், சிறிது கடுகெண்ணெய் ஆகியவற்றைக் கலந்து வெதுவெதுப்பாக வயிறு, முதுகு,தலை ஆகிய பகுதிகளில் தேய்த்து நன்றாக ஊறிய பிறகு, வெதுவெதுப்பான நீரில் குளித்தல், அன்றைய உணவில் சூடான மிளகு ரசம், கருவேப்பிலைத் துவையல், தேங்காய், சீரகம் சேர்த்து அரைத்த பூசணிக்காய் கூட்டு, மோர் ,கேரட் உசிலி என்ற வகையில் சாப்பிடுதல், வெதுவெதுப்பான நீரைப் பருகுதல், காலை வேளையில் வெறும் வயிற்றுடன் உள்ள போது சிறிது நேரம் ஸ்கிப்பிங் எனப்படும் கயிறுதாண்டும் உடற்பயிற்சி செய்தல், வீட்டிலுள்ள வேலைகளைத் தானாகவே எடுத்துக் கொண்டு சுறுசுறுப்புடன் செயல்படுதல் போன்றவற்றைச் செய்தல் நலம்.