கபத்தின் குண ஆதிக்கங்களை அகற்றவும் ரத்தக் கசிவை நிறுத்துவதற்கும் கசப்பும் துவர்ப்பும் நிறைந்த உணவும் மருந்துகளும் மட்டுமே உதவக் கூடும். கசப்பு பசித்தீயையும், தாது அக்னிகளையும் தூண்டி, உணவை நன்கு பாகம் செய்கின்றது. கபத்தின் குணங்களால் ஏற்பட்ட கேன்சர் அடர்த்தியை தளர்த்துகிறது. அதனால் நீங்கள் அம்மாவின் உணவில் பாகற்காய், சுண்டைக்காய், வாழைக் கச்சல், கொள்ளு, பாசிப்பருப்பு, வாழைப்பூ, மணத்தக்காளி, கறிவேப்பிலை, நெல்லிமுள்ளி, நன்கு கடைந்து ஆடை எடுத்த மோர், ஆடை புடைக்க இளந்தீயில் காய்ச்சி ஆடை நீக்கிய பசுவின் பால், வல்லாரைக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை ஆகியவற்றை உணவாகக் கொடுக்கவும்.