உடலுக்கு ஒவ்வாத உணவு வகைகளின் சேர்க்கை (உதாரணம்: பாலுடன் கொள்ளு, பாலுடன் பலாப்பழம், பாலுடன் மீன், தயிரைச் சூடாக்கிச் சாப்பிடுதல்), வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு பகலில் படுத்துறங்குதல், வேலை ஏதும் செய்யாமல் சீட்டாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டே வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு மெல்லுதல், தங்கத்தைத் தவிர மட்டமான உலோகங்களால் செய்யப்பட்ட ஆபரணங்களை உடலில் அணிந்து கொள்ளுதல், குடல் சுத்தி முறைகளைக் கடைப்பிடிக்காமல் அலட்சியமாக இருத்தல், நோய்க்குத் தேவையற்ற மாத்திரைகளைப் பயன்படுத்துதல், நெற்கதிர்களைப் புழு பூச்சிகளிடம் இருந்து காப்பாற்ற ரசாயனக் கலவை மருந்துகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்துதல், உடல் உட்புறக் கசிவுகளை தோற்றுவிக்கும் மீன், வெல்லம், தயிர் போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்துவது, முன் உண்ட உணவு செரிக்காத நிலையிலேயே அடுத்த உணவை மனம்போன போக்கில் சாப்பிடுவது போன்ற சில காரணங்களும் புற்றுநோயை ஏற்படுத்தலாம்.