அம்மா இருந்தால் தெய்வம் தேவையில்லை!
மு.களஞ்சியம், மஜித் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரதீஷ் இயக்கியுள்ள புதிய படம் "பயம் அறியான்'. லண்டன் வாழ் தமிழர் கே.சற்குணராஜா தயாரிக்கும் இதில் புதுமுகம் மகேஷ்ராஜா, உதயதாரா, "பாய்ஸ்' மணிகண்


மு.களஞ்சியம், மஜித் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரதீஷ் இயக்கியுள்ள புதிய படம் "பயம் அறியான்'. லண்டன் வாழ் தமிழர் கே.சற்குணராஜா தயாரிக்கும் இதில் புதுமுகம் மகேஷ்ராஜா, உதயதாரா, "பாய்ஸ்' மணிகண்டன், கிஷோர் உள்ளிட்ட பலர்
நடிக்கிறார்கள். படத்தின் இறுதிக் கட்டப் பணியில் இருந்த இயக்குநரிடம் பேசியபோது...
""மனிதனின் வாழ்க்கை முடியும் கல்லறையில் தங்களது வாழ்க்கையைத் தொடங்கும் ஒரு காதல் ஜோடியைப் பற்றிய கதை இது. அதனால் எங்கள் யூனிட் முழுவதும் வட சென்னையில் உள்ள ஒரு கல்லறையில் பல நாள்கள் தங்கி, சமைத்துச் சாப்பிட்டு படப்பிடிப்பு நடித்தினோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜேசுதாஸ் பாடியுள்ள "அம்மா நீயிருந்தால் ஒரு தெய்வம் தேவையில்லை...' என்ற பாடல் மிகப் பெரிய அளவில் ஹிட் ஆகும்.
பி.சி.சிவன் இசையமைத்துள்ள இந்தப் பாடலைப் பாடும்போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட ஜேசுதாஸ், பாடலைப் பாட ஐந்தரை மணி நேரம் எடுத்துக்கொண்டார். காதல், ஆக்ஷன், சென்டிமெண்ட் காட்சிகளை யதார்த்தம் மீறாமல் படமாக்கியுள்ளோம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...