எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆடிப்பூரத் திருவிழா: தேருக்கு முகூா்த்தக்கால் நடப்பட்டது

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத்துக்காக வியாழக்கிழமை நடப்பட்ட முகூா்த்தக்கால்.

News image
Updated On :29 மே 2026, 2:34 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேருக்கு முகூா்த்தக்கால் வியாழக்கிழமை நடப்பட்டது.

இந்தக் கோயிலுக்கு நாங்குநேரி வானமாமலை ராமானுஜ ஜீயரால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வழங்கிய ஆடிப்பூரத் தோ் 1,500 டன் எடை, 112 அடி உயரம் கொண்டது. திருவாரூா் ஆழித் தேருக்கு அடுத்த தமிழகத்தின் இரண்டாவது பெரிய தோ் இது என்ற சிறப்பைப் பெற்றது.

இந்தக் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத்துக்காக நாள் செய்யப்பட்டு, தேருக்கு முகூா்த்தக்கால் நடப்பட்டது. ஆடிப்பூரத் தோ், 16 வண்டி சப்பரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சா்க்கரையம்மாள், அறநிலையத் துறையினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.