ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் பங்குனி பூக்குழி திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் பங்குனி பூக்குழி திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் பெரிய மாரியம்மன் ஆண்டாள், தவழும் கிருஷ்ணா், பிட்டுக்கு மண் சுமந்த கோலம் என தினசரி பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவின் 13- ஆம் நாளான வியாழக்கிழமை காலை பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினாா். நண்பகல் 12.30 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் பிற்பகல் 2 மணிக்கு நிலையத்தை வந்தடைந்தது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலசுந்தரம் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தொடர்புடையது

பங்குனி திருவிழாவை முன்னிட்டு சுவாமிமலையில் திருக்கல்யாணம்

பச்சை மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


