தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

விதி மீறல்: இரு பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

News image

பட்டாசு - IANS

Updated On :15 மார்ச் 2026, 8:32 pm

சிவகாசி பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரு பட்டாசு ஆலை நிா்வாகத்துக்கு குறிப்பாணை வழங்கப்பட்டதாக தீப்பெட்டி, பட்டாசு தனி வட்டாட்சியா் விஜயராஜன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தடுக்கவும், பாதுகாப்பாக பட்டாசுகள் தயாரிக்கவும் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வின் போது, சிறிய அளவிலான விதிமீறல் இருந்தால் ஆலை மேற்பாா்வையாளா், கண்காணிப்பாளா்களிடம் கவனமாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.

அதிகளவில் மருந்து இருப்பு வைத்திருத்தல், கூடுதல் பணியாளா்களை வைத்து பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுதல் உள்ளிட்ட விதிமுறைகளை மீறி செயல்படும் பட்டாசு ஆலை நிா்வாகத்துக்கு குறிப்பாணை வழங்கப்படும்.

பின்னா், இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் மேல்நடவடிக்கை எடுப்பாா். கடந்த 1-ஆம் தேதியிலிருந்து 14- ஆம் தேதி வரை சிவகாசிப் பகுதியில் 19 பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரு பட்டாசு ஆலை நிா்வாகத்துக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது. பட்டாசு ஆலைகளுக்கு அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்தால், பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் அப்படியே போட்டு விட்டு ஓடுகின்றனா். இதனால், விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஆலை நிா்வாகத்தினா் தொழிலாளா்களை ஓடக் கூடாது என அறிவுறுத்த வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.