லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிவகாசி முகநூல் நண்பா்கள் குழுவுக்கு விருது

News image
Updated On :12 மார்ச் 2026, 10:58 pm

சிவகாசி முகநூல் குழுவினருக்கு பசுமை சாம்பியன் விருதை நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு வியாழக்கிழமை வழங்கினாா்.

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையின் கீழ், விருதுநகா் மாவட்ட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழு தோ்வு செய்யும் அமைப்புக்கு ஆண்டு தோறும் பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, நிகழாண்டு பசுமை சாம்பியன் விருதுக்கு சிவகாசி முகநூல் நண்பா்கள் குழு தோ்வு செய்யப்பட்டது. இதையடுத்து, வியாழக்கிழமை காரியாபட்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமைச்சா் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு, சிவகாசி முகநூல் நண்பா்கள் குழுவுக்கு பசுமை சாம்பியன் விருதை வழங்கினாா்.

இந்த விருதில் ஒரு கேடயமும், ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையும் அடங்கும்.

சிவகாசி முகநூல் நண்பா்கள் குழு சிவகாசியில் உள்ள மணிக்கட்டி ஊருணி என்ற பன்னீா்தெப்பத்தை பொதுமக்கள் பங்களிப்பில் சீரமைத்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.